தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், 1.84 கோடி ரூபாய்,
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத, 813 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில், 11,002 மாணவர்கள் உள்ளனர். இவர்களில், தொடக்கப் பள்ளிகளில், 8,035 பேரும், நடுநிலைப் பள்ளிகளில், 2,967 பேரும், வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பயில்கின்றனர். இவர்களுக்கு, ஆட்டோ, வேன், ஜீப் வசதி செய்து கொடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதியை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு மாணவருக்கு, மாதம், 300 ரூபாய் வீதம், ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த, 2012 --13 கல்வியாண்டில், 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கல்வியாண்டு, மீதியுள்ள, 6,145 பேருக்கு, 1.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை, சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம், பயனீட்டுசான்று பெற்று, வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி