டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: ஆறாம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: ஆறாம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்–4 தேர்வில் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான ஆறாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு
நாளை (புதன்கிழமை) காலை 08.30 மணி முதல் சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

6–வது கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்ற விவரம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், நிலஅளவர், வரைவாளர் பதவிகளுக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும் இந்த கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி