ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.தமிழகத்தில்
மத்திய அரசின் நிதி உதவியுடன் இரண்டு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. சேலம் மாவட்டம் அபிநவத்திலும், விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலையிலும் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.இரண்டு பள்ளிகளிலும் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 25 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இது வரை காலமுறை பணிஆணை வழங்கப்படவில்லை. அந்த ஆணை நேற்று வழங்கப்பட்டது.தமிழக பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்காக ஏகலைவா மாதிரி பள்ளிகளை கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி