ந.க.எண்.000003/இஇ(ப)/2014 நாள் : 09.01.2014
பொருள் : மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க அனுப்பப்படும் விண்ணப்பங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க உத்திரவிடுதல் - சார்பு.
- - - - -
அரசுத் தேர்வு இயக்ககத்தில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய வேண்டி மேல்நிலை / உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேண்டுகோள்கள் நேரிடையாக அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது அரசு அலுவலக நடைமுறைக்கு முரணாணதாகும்.
எனவே, அனைத்து வகை தலைமையாசிரியர்களும் அவர்களின் கட்டுபாட்டு அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் வழியாக தொகுத்து அனுப்பி வைத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
// உண்மை நகல் //
(ஓம்) ஒஒஒஒஒ
இயக்குநர்
(ஓம்) ஒஒஒஒஒ
இயக்குநர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி