டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நேற்று நடந்தது. தமிழகத்தில், 116 மையங்களில் நடந்த தேர்வில் ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் நேரடி உதவியாளர்கள் பணியிடங்கள் 57, நேர்முக உதவியாளர் பணியிடங்கள் 7, உதவியாளர் பணியிடங்கள் 37, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் 28, டைப்பிஸ்ட் பணியிடங்கள் 139 ஆகிய பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்து நிரப்புவதற்கான தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த, 2013 நவ., 22ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த பணியிடங்களுக்கு, நேற்று தேர்வு நடந்தது.தமிழகத்தில், 116 மையங்களிலும், சென்னையில், எழும்பூர், பெரம்பூர், வடபழனி,திருவொற்றியூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில், எழுத்து தேர்வு நடந்தது. ஏராளமான பட்டதாரிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட பின், பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி