பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


நடப்பு கல்வி ஆண்டிற்கான மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்விதமாக சிறப்பு அனுமதி திட்டத்தில்
ஆன் லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்ஆகும்.

தேர்வு செய்யப்பட்ட மையங்களில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்கள் பற்றிய விபரத்தை www.tndge.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை பதிவுச் சீ ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சிறப்பு மையத்தில் உரிய கட்டணங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய தேர்வு கட்டணத்துடன் ரூ. ஆயிரம் சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன்பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி