பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்பு?


பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள்களை 10 நாட்களில் திருத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.

மார்ச் இறுதியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, 32 மாவட்டங்களில் 66 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 36 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மறுகூட்டல் நடத்தப்பட்டபோது ஏற்பட்ட குளறுபடிகளை தவிர்க்க, அந்தந்தபாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதிகபட்சம் 10 நாட்களில் முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளும் விரைவாக வெளியாக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி