பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட் கள் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட் கள் பயிற்சி.


திருச்சி புத் தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகள், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேலாண்மைக்குழு உறுப்பி னர்
பயிற்சிக்காக மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி கடந்த 18ம் தேதி துவங்கியது. பயிற்சி 3 நாள் நடக்கிறது.இந்த பயிற்சியில் ஆசி ரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்பட 270 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை திருச்சி மாவட்டஉதவி திட்ட அலுவலர் சரவ ணன் துவக்கி வைத்தார்.

பயிற்சியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளில் புதிய பள்ளி துவங்குதல், பள்ளி யின்உட்கட்டமைப்பு வசதி கள், குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள், பள்ளி மேலா ண்மைக் குழு மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள், உள்ளாட்சி நிர்வாகத் தின் கடமைகள்,குழந்தை உரிமை பாது காப்பு போன்றவற்றை கருத்தாளர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும் பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ம் தேதி வரை அனைத்து வட்டார வளமையங்களுக்கு உட்பட்ட குறுவளமைய அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட் கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி