தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்.


தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம்உள்ளது.தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது.

துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு, வர்த்தக வரித்துறை உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி வருகிறது.

முடிவு வெளியிடப்படவில்லை

தற்போது குரூப்–1 தேர்வு, குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு ஆகிய தேர்வுகளின் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. அவற்றை வெளியிடும் பணியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.

மதிப்பெண் விவரம்

இந்த நிலையில் சில தேர்வுகளில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தெரியவில்லை என்றும், வெளிப்படையான முறை தேவை என்றும் பலர் தேர்வாணையத்தை வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்விலும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் விவரம், அவர்கள் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுகிறார்கள். எதனால் தேர்வு செய்யப்படவில்லை என்ற அனைத்து விவரங்களையும் ஒளிவு மறைவின்றி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும், ஆணைய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி