நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.


ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும், நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

மாநில பொதுச்செயலர்ரெங்கராஜன், திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2006ல், ஆறாவது சம்பளக்குழு அமல் படுத்தப்பட்டது; அதன்படி, தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு, 13,500 ரூபாய், சம்பளமாக வழங்க வேண்டும்; ஆனால், 8,000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த, முதல்வர் ஜெயலலிதா, "ஆறாவது சம்பளக்குழு முரண்பாடுகளை களைவேன்' என்றார். இதற்காக, மூவர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, கோரிக்கை நிறைவேற்ற, கால அவகாசம் வேண்டும் என்கின்றனர். ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, ஒரு நாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தமும், 26ம் தேதி, அடையாள வேலை நிறுத்தமும், கூட்டணி சார்பில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி