சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12வது மாநில மாநாடு கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி, ஊதியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியமும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.3,500 ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். சமையலர் மற்றும் அமைப்பாளர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள பணிகால நிபந்தனையை ரத்து செய்து, கல்வி தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பணிநீக்க காலத்தை, பணி காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி