தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை?


தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்விஉதவித் தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு,
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ,மாணவிகளின் இடைநிற்றல் கல்வியை தவிர்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வழங்குகிறது. இத்தொகை ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியில் அவரவர் வங்கிக் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். 2013-14ம்கல்வியாண்டு முடியும் தருவாயில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 5 ஆயிரத்து 660 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண் விவரங்களை நேரில் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னரே இடை நிற்றல் உதவித் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி