பல மாவட்டங்களில்,கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள்,குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால்,பள்ளி மாணவர்களுக்கு,இன்று காலை,நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு,
பிற்பகல், 2:00மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளில்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்,மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக,இன்று காலை, 10:00மணிக்கு,தேசிய திறனாய்வு தேர்வை நடத்த,தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.இந்த தேர்வை, 1.6லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில்,கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால்,அவை,நேற்றிரவு வரை,தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால்,இன்று காலை, 10:00மணிக்கு நடக்க இருந்த தேர்வை,பிற்பகல், 2:00மணிக்கு தள்ளிவைத்து,தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம்,முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக,இன்று காலை,மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
இங்க கூட குழப்பமா ?எல்லாவற்றிலுமே தாமதமா?... அட கடவுளே
ReplyDelete