தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற
ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவுதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி 26.02.2014 அன்று ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அதே போன்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக் குழுவில் (டிக்டோஜாக்) இணைந்துள்ள ஆசிரியர் சங்கங்களும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
எனவே 26.02.2014 மற்றும் 06.03.2014 ஆகிய வேலை நிறுத்த நாட்களில், பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் உள்ளதால், அவ்வாறு ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், கற்றல், கற்பித்தல் பணிகள் தடையின்றி நடைபெறும் பொருட்டு, தங்கள் மாவட்டத்திலுள்ள வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அன்றைய நாளில் பள்ளி நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இந்நேர்வில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை விரைவில் அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்படுகிறது.SSA, மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDelete