நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு
இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இளநிலை மற்றும் முதுநிலை 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களில் இதுவரை தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500க்கான அபராத கட்டணம் சேர்த்து தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள்,தேர்வாணையர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை 12 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி