கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது
எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும்அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கமாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
வன்முறை சம்பவங்களால் கை,கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்க நேரிட்டாலோ, கண் பார்வை பாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலி காட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி