வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 25- ஆம் தேதி கடைசி நாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 25- ஆம் தேதி கடைசி நாள்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு நாள்களே உள்ளன. வரும் 25- ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக, கடந்த 9- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், 9.95 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர்.இப்போது, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்களை பெற்று அளிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 25 ஆகும்.

இதற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் யாரும் பெயர்களைச் சேர்க்க முடியாது.மொபைல் போன் சேவை: வாக்குக்கு பணம் அளிப்பது தொடர்பான புகார்களை புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை மொபைல் போன் மூலமே அனுப்பும் புதிய வசதியைதேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் சனிக்கிழமை இந்தப் புதிய வசதியை தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அஜய் யாதவ் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி