மாணவரை தாக்கிய ஆசிரியை மீது புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2014

மாணவரை தாக்கிய ஆசிரியை மீது புகார்.


சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.
குமாரபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், ரத்தினம் தம்பதியரின் மகன் சந்தோஷ் 15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். தற்போது, அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு முடிந்துள்ளது. ஆங்கிலம் முதல் தாள், நாளை (ஏப்., 1) நடக்கிறது.அதற்காக சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை நேற்று, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.சிறப்பு வகுப்புக்கு, மாணவர் சந்தோஷ் சாப்பிடாமல் வந்துள்ளார். பசியின் காரணமாக, ஆசிரியரிடம் சொல்லாமல் வெளியே சென்றார். அப்போது பின்னால் சென்ற ஆசிரியை வசந்தி, பள்ளி கேட் முன் மாணவர் சந்தோஷை மரித்து, பிரம்பாலும், கையாலும் சரமாரியாக தாக்கினார். அதில் வலி தாங்க முடியாமல் மாணவர் கதறினார்.ஒரு வாரத்துக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பள்ளிக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வீட்டுக்குச் சென்ற சந்தோஷம், தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அரசு மருத்துவமனைக்குஅழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி