பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மாணவி தற்கொலை தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மாணவி தற்கொலை தினத்தந்தி


தனியார் பள்ளியின் கொடுமை



பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மனம் உடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.
வெளியே நிறுத்தினார்
மணலி சி.பி.சி.எல். நகர், 9-வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா(வயது 13). இவள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
பூஜா, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றாள். ஆனால் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவி பூஜாவை வகுப்பு ஆசிரியை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய பூஜா, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். திங்கட்கிழமை கண்டிப்பாக பள்ளி கட்டணம் செலுத்தி விடுவதாக அவளை பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனாலும் சமாதானம் அடையாமல் மனமுடைந்து காணப்பட்ட மாணவி பூஜா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

போலீசில் புகார்

இதுபற்றி மணலி போலீசில் மாறன் புகார் செய்தார். அதில், “எனது மகளை பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மனம் உடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள். அவளது சாவுக்கு காரணமான பள்ளி வகுப்பு ஆசிரியை, தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி” கூறி இருந்தார்.
நேற்று பள்ளிக்கு விடுமுறை. ஆனாலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சகமாணவிகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மணலி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்

மேற்கண்ட செய்தியை போல இன்னும் சில தினங்களுக்குள் TET தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை என்ற செய்தி வந்தாலும் வரலாம்.

8 comments:

  1. adharku TET PASS CANDIDATE IUM SAGA SOLRINGALA....APADI SETHUTA MATTUM INDHA GOVT VELAI KODUTHUDUMA PONGA SIR ....... PONGA

    Idherkellam tamilaga arasu endha nadavadikkaium edukaadheeee........!
    surandubavargal irukkumvarai suicide nadandhu kondu dhan irukkum......

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் sir,

      நான் TET PASS CANDIDATE ஐ சாக சொல்லவில்லை.அந்த அளவு TET PASS CANDIDATE முனமுடைந்த நிலையில் உள்ளனர் என்று சொல்கிறேன்.

      Delete
  2. ஒரு செய்தியின் பின்னணி யில் அதுவும் இதுமாதிரியான செய்தியின் முடிவில் TET பற்றி குறிப்பிட வேண்டியதில்லை.
    ஒரு வேளை வேறு யாராவது நபரோ ஆசிரியரோ மன உளைச்சலால் இறந்திருந்தால் நாளை TET தேர்வர்களும் இந்த நிலைக்கு வரலாம் என்றொரு கருத்தை முன் வைக்கலாம். தவறில்லை. தேவையில்லை என்று தான் குறிப்பிடுகிறேன்.
    ஒரு ஆசிரியருக்கு அந்த நிலை வரவே வராது. மீறி வந்தால் அவர் அப்போது தான் ஆசிரியர் தகுதியை இழப்பார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் ஏற்கனவே TET தேர்வின் காரணமாக மதுரையில் ஒருவர் உயிரிழந்ததாக தினசரியில் செய்தி வந்தது.

      சென்ற ஆண்டு கூட சேலத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தீக்குளித்து இறந்தார்.

      ஏனெனினும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  3. Ilavasa tv mixci grinder adu maadu fan ellam ilavasamaga valangum arasangam manithanukku adipadai thevaiyakiya kalviyai ilavasamaga valankirunthal nam naadum vallarasu akirukkum ithu ponra kulanthaikalum iranthirukka mattarkal. ivai anaithum nam arasankathirkku therinthu irunthum mounam sathippathan arthamthan namakku enrumea puriyatha puthiraga ullathu

    ReplyDelete
    Replies
    1. Hello enna paesuringa? Comedy pandringa! Govt schoola epavume ilavasama dhane kalvi iruku...apuram thaniyar palli masla nigam kondu panam illanaalum sarthi padika vaika ninaipadhu yaarudaya thappu?

      Delete
  4. VERA ONNUM ILLAI NANBARGALE....!

    ANDHA ALAVUKU SUITCASE PORADHAALA..
    ENDHA SUICIDE IUM KANDUKARADHU ILA ........

    ReplyDelete
  5. Asiriyaraaga pogum allathu aasiriyaraana irukkum thaangal ivvaarana mananilaiyai thoonduvathu thavaraagum, thanudaya tholvikkaaga tharkolai seithu kollum oruvar evaaru naalai aasiriyaraagi maanavargalai tholvi bayaththil irunthu meetduppaar, thayavu seithu nalla karuththugalai mattum pathivu seiyungal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி