செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம்.


வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற சேவையை சென்னையி்ல அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ்
செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ் மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம்.

வங்கிச் சேவை இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இத்திட்டம் மிகவும் ஏற்றது என்றும் இது விரைவான, எளிமையான மற்றும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி