டிட்டோஜாக் - அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

டிட்டோஜாக் - அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவு.


இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தகவல் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி