பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.
வரும், 25ம் தேதியுடன், பிளஸ் 2 தேர்வு முடிகிறது. மறுநாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. இதற்கு, இன்னும், ஒரு வாரம் மட்டுமே உள்ளது.அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை முடித்துவிட்ட மாணவ, மாணவியர், எழுத்து தேர்வுக்கு, ஆயத்தமாகி வருகின்றனர்; பள்ளிகளில், மாணவருக்கு, இறுதிகட்டமாக, தேர்வு நுணுக்கங்கள், ஆலோசனை வழங்கப்படுகின்றன.இந்நிலையில், தேர்வெழுத உள்ள, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தேர்வுத்துறைஇணையதளத்தில், ஓரிரு நாளில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட உள்ளன. இதற்காக, தேர்வுத்துறை, ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி, 'லிங்க்' வசதியை கொடுத்துள்ளது.தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், ஒவ்வொரு பள்ளியும், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, தங்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஹால் டிக்கெட்டுகளை, பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு, வழங்குவர். வரும், 20 அல்லது, 21ம் தேதியில், ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கடைசி நேரத்தில், மாணவர்கள், தேர்வுக்கு, நல்ல முறையில் தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், விடுமுறை அறிவித்து உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி