தொடக்கப்பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை!; இறுதித் தேர்வு 21ல் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2014

தொடக்கப்பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை!; இறுதித் தேர்வு 21ல் துவக்கம்.


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 16 முதல் தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன. இம்மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி முதல் மூன்றாம் பருவ தேர்வுகள் துவங்குகின்றன.கோவை செல்வபுரம் (வடக்கு) மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கோதைநாயகி கூறுகையில், ''மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூன்றாம் பருவ தேர்வுகள் நடக்கவுள்ளது. ''தற்போது, அதற்கான பயிற்சி தேர்வுகள் நடத்தி வருகிறோம். தேர்தலை முன்னிட்டு 23, 24, 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி இறுதி வேலைநாளாக பள்ளிகள் செயல்படும். மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி