துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று (17.04.2014)கடைசிநாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று (17.04.2014)கடைசிநாள்.


அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் துறைத்தேர்வு மே 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஏப்ரல் 15-ம் தேதி வரை தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மேலும் 2 நாட்களுக்கு அதாவது, 17-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். துறைத்தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி