18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.


நாமக்கல் மாவட்டத்தில் 16 வது இந்தியப் பொதுத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற 18.04.2014 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
18.04.2014 அன்று கிறித்துவ பெருமக்களின் "புனித வெள்ளி" திருநாளாகும். இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் தேர்தல்பணி பெற்றுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். அன்று முழு நேர தேர்தல் வகுப்புகள் நடத்துவது என்பது அப்பண்டிகையின் நோக்கத்தையும் உற்சாகத்தையும் குலைப்பது போன்றதாகும்.

எனவே 18.04.2014 அன்றைய இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்புகளை பிறிதொரு நாளில் நடத்திடக் கோரி 15.04.2014 அன்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் மதிப்புமிகு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவினை கனிவுடன் பரிசீலித்த ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்கப் பொறுப்பாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி