ஜூன் 2ல் பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

ஜூன் 2ல் பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை நடவடிக்கை.


கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் புத்தங்களை ஜூன் 2ல் மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே நாளில்இலவச பஸ் பாஸ்கள் வழங்கவும் போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாணவர்களின் கணக்கின்படி, பஸ் பாஸ் அட்டைகள் தயாராகி வருகின்றன.பாடம், நோட்டு புத்தகங்கள் வழங்கிய இரு வாரங்கள் கழித்து சீருடை, காலணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி