பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்து மையங்களிலும் நிறைவடைந்துள்ளன.
இப்போது, இந்த மதிப்பெண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 12-ஆம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலிருந்து மதிப்பெண் விவரங்கள் சிடிக்களாக தொகுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த மையங்களிலிருந்து இந்த விவரங்களை முழுமையாகப் பெற ஒரு வாரம் வரை ஆகலாம் எனதகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு, மதிப்பெண்ணில் பிழைகளை நீக்கவும், சரிபார்க்கவும் 2 வாரங்கள் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்றது. தேர்வை பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி