எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்


தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள்ஏற்கனவே கடந்த 10ம் தேதியே திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன.தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 9ம் தேதி பிளஸ்2 ரிசல்ட் வர உள்ளது. இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் வராமல் இருக்கக்கூடாது என ஏற்கனவேஅறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த பட்டியலை தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள் பட்டியலை தயாரிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்விஅலுவலர்கள் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளனர். வராதவர்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதனால் நடவடிக்கை இருக்குமோ என ஆப்சென்ட் ஆன ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி