துவக்கப்பள்ளிகளில் 3ம் பருவ தேர்வு இன்று முதல் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

துவக்கப்பள்ளிகளில் 3ம் பருவ தேர்வு இன்று முதல் துவக்கம்.


துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இன்று முதல் மூன்றாம் பருவத்தேர்வுகள் துவங்குகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. உயர்நிலை மற்றும மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 17ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது.

இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஏ.பி.எல்., எனும் செயல்வழிக்கற்றல் முறை உள்ளதால், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வுநடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடப்பதால் ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 30ம் தேதி பள்ளி வேலைநாளாக செயல்பட்டு, மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி