தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...


தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் முடிந்ததும், வவுச்சரை கொடுத்து, வி.ஏ.ஓ.,க்கள் அதை, தேர்தல் ஆணையத்தில் பெற்று கொள்ளலாம். வி.ஏ.ஓ.,க்கள் கையில் இருந்து, பணத்தை செலவழித்து வந்தனர். இதற்கான தொகை, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. இந்த ஆண்டு வி.ஏ.ஓ.,க்களுக்கு செலவினமாக, ரூ.ஆயிரம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,ரூ.500-ஐ, முன்பணமாக வழங்கவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டத்தில் உள்ள, 60 ஆயிரத்து 418 ஓட்டு சாவடிக்கு, ரூ.6 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்ரூ.3 கோடியே, 2 லட்சத்து 9 ஆயிரத்தை முன்பணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி