6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு


அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.இதில் பிளஸ் 1 வகுப்புக்கு தகுதிவாய்ந்த முதுகலை மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களை கொண்டும் உரிய ஆசிரியர்கள் இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை வரவழைத்தும் தலைமை ஆசிரியர்கள் முழுபொறுப்பேற்று மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.மேலும் பிளஸ் 1 தேர்ச்சி முடிவுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.இதில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 5 சதவீதம் தலைமை ஆசிரியரே மறுமதிப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்ச்சி முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மே 5ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ்1 தேர்வு முடிவு வெளியிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கூட்டம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி