ராணுவப் பணி எழுத்து தேர்வு திருச்சியில் 600 பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

ராணுவப் பணி எழுத்து தேர்வு திருச்சியில் 600 பேர் பங்கேற்பு.


திருச்சியில் நேற்று நடந்த ராணுவப் பணிக்கான எழுத்து தேர்வில் 600 பேர் பங்கேற்றனர்.
இந்திய ராணுவப் பணியில் சிப்பாய், டெக்னிக்கல், ஸ்டோர் கீப்பர், பொதுப் பணி ஆகிய பிரிவுகளுக்கு ஆள் சேர்க்கும் முகாம் கடந்த ஃபிப்ரவரியில் கரூரில் நடந்தது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.இதன் பின்னர் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆயிரம் பேருக்கு நடந்தது. இதில், 600 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் பிரதேச ராணுவ மைதானத்தில் நடந்தது. இதில், 600 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி