மோசடி புகாரை தவிர்க்க வாக்கு பதிவுக்கு பிறகு இயந்திரத்தின் குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்: தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2014

மோசடி புகாரை தவிர்க்க வாக்கு பதிவுக்கு பிறகு இயந்திரத்தின் குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்: தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு.


வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை கண்டிப்பாக அழுத்த வேண்டும்’’ என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை : வாக்குப் பதிவுமுடிந்தவுடன், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தவில்லை என்று கடந்த தேர்தல்களின்போது புகார்கள் வந்தன. குளோஸ் பட்டனை அழுத்தாமல் விட்டுவிட்டால், மோசடி நடக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே, தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்தவுடன், அந்த வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை வாக்குச் சாவடி அதிகாரி அழுத்த வேண்டும். அதன்பின்னர், கடைசியாக வாக்களித்தவரின் வரிசை எண்ணுக்கு கீழே, ஒரு கோடு வரையவேண்டும். இந்த நடைமுறை அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

மேலும், வாக்கு பதிவு முடிந்தவுடன், எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற அத்தாட்சி நகலை வாக்குச்சாவடி அதிகாரிகள், அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கும் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி