நாளை வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூர பூத்களுக்கு செல்ல பஸ் வசதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

நாளை வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூர பூத்களுக்கு செல்ல பஸ் வசதி.


ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, நாளை வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாளன்று, பூத்களில் ஓட்டுப்பதிவு அலுவலர்களாக நியமித்து உள்ள அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான, இறுதிகட்ட பயிற்சி, சட்டசபை தொகுதி வாரியாக அளிக்கப்பட உள்ளது.

ராஜபாளையம் தொகுதியில் ராஜூக்கள் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரி, சாத்தூரில் எட்வர்ட் மேல்நிலை பள்ளி, சிவகாசியில், சாட்சியாபுரம் எஸ்.சி.எம். எஸ்.பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகரில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டையில், தேவாங்கர் கலை கல்லூரி, திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி போன்ற இடங்களில், பயிற்சி முகாம்,நாளை (ஏப்., 23 ) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏப்., 16ல் பயிற்சியில் கலந்துகொண்ட, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அதே மையத்தில் கலந்துகொள்ளவேண்டும். அன்று, ஓட்டுச்சாவடி பெயர் அடங்கிய பணிநியமன உத்தரவு வழங்கப்படும். தொலைவாக உள்ள பூத்களுக்கு செல்ல, பஸ் வசதிசெய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி