வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., நாளை மாலை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., நாளை மாலை துவக்கம்


''ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணி, நாளை மதியம் துவங்கும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 68 ஆயிரம் ஓட்டுப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1.14 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் உள்ளன. இவற்றில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவுஇயந்திரங்களை, ஓட்டு சாவடிகளுக்கு எடுத்து செல்லும் பணி, 23ம் தேதி மதியம் துவங்கும். இதற்காக வேன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு போடும்படி, வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணியும், நாளை மாலை துவங்கும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி