கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் செ.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1988- முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவந்தோம். ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மட்டும் குறைக்கப்பட்டது. அதுமுதல் இதுவரையில் (தற்போதைய ஆட்சியிலும் ) மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் பெறமுடியவில்லை.இந்நிலையில் 16-வது மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியோ அல்லது எந்த கட்சியானாலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தருவதாகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பதாக ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி