எஸ்எம்எஸ் தகவலைக் காட்டினாலேயே ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

எஸ்எம்எஸ் தகவலைக் காட்டினாலேயே ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருவதால், ஆசிரியர்கள் அனுமதிக்கடிதம் இருந்தால் மட்டுமே தேர்தல் பணிக்குச் செல்லவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அத்துறையினரிடம் பேசியுள்ளோம். எஸ்எம்எஸ் தகவலைக் காட்டினாலேயே ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு அலுவலர் இருப்பார்கள். 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் சாவடிகளில் மட்டும் 5 பேர் பணியில் இருப்பார்கள். வாக்காளர் அத்தாட்சி சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் மத்திய சென்னையில் 5 பேர் பணியில் இருப்பார்கள்.

வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடியில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக,அதன் அருகில் உள்ள 2 வீடுகளில் இருந்து தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணை வாங்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்து 816 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது அசம்பாவிதமோ, வேறு ஏதோ சம்பவங்களோ நடப்பதாக தகவல் வந்தால் தேர்தல் துறையினர் அந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள இது உதவும். அரசியல் தொடர்புடையவர்களின் எண்களை பெறமாட்டோம். இதற்காக தலைமைச் செயலகத்தின் 2-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கு, கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டுவருகிறது.இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி