தேர்தல் பணி நாட்களை ஈடு செய்ய மே மாதம் திறக்கப்படும் பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

தேர்தல் பணி நாட்களை ஈடு செய்ய மே மாதம் திறக்கப்படும் பள்ளிகள்.


தேர்தல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நாட்களை ஈடு செய்ய, பெரும்பாலான அரசு பள்ளிகளை, மே முதல் வாரத்தில் திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, ஊராட்சி மற்றும் உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கடந்த 2013--14ம் ஆண்டு, 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்தாண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டன. லோக்சபா தேர்தல் பயிற்சிக்கு 3 நாட்கள், தேர்தல் பணிக்கு 3 நாட்கள் என, ஆசிரியர்களின் பணி நாட்கள் செலவானது.ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளில், பள்ளிகளை மூடிவிட்டு தேர்தல் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஏப்., 30ம் தேதியுடன் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிய உள்ளது. எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, தேர்தல் பணி பயிற்சி மற்றும் தேர்தல் பணி நாட்களில் விடுமுறை விடப்பட்டதால், வேலை நாட்களை ஈடு செய்ய, தேர்வுகள் முடிந்தும் மே முதல் வாரம் பள்ளிகளை திறக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றப் பேரவையின் மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:கடந்த காலங்களில், எஸ்.எஸ்.ஏ., பயிற்சி நாட்கள், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் நாட்கள், பள்ளி வேலை நாட்களாக கருதப்பட்டன. ஏப்ரல் 30ம் தேதியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த தடவை, பயிற்சி நாட்கள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படவில்லை.மே முதல் வாரத்திலும் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டியுள்ளது. ஆகவே, எஸ்.எஸ்.ஏ., பயிற்சி நாட்கள், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணி நாட்களை, பள்ளி வேலை நாட்களாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஆரோக்கியதாஸ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி