வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை எவை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2014

வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை எவை?


வாக்குப் பதிவு முடிந்த பிறகு, செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:வாக்குப் பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள க்ளோஸ் பொத்தானை அழுத்தி அந்த இயந்திரத்தை மூட வேண்டும். ஆனால், அவ்வாறு பொத்தானை அழுத்தி உரிய முறையில் இயந்திரத்தை மூடாமல் இருப்பதாகவும், அது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கடந்த தேர்தல்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

தேர்தலைச் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வழி செய்திடும் வகையில் வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை தொடர்பாக சிலவழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளை வாக்குச் சாவடிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.வாக்குப் பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள க்ளோஸ் பொத்தானை வாக்குச் சாவடிகளில் உள்ள வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அழுத்தி இயந்திரத்தை மூட வேண்டும். பொத்தானை அழுத்தாமல் இயந்திரத்தை மூடக் கூடாது. வாக்குப் பதிவு செய்யும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய படிவம் 17 ஏ-வை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், இறுதியாக வாக்கினை பதிவு செய்த வாக்காளரின் விவரத்துக்குக்கீழ் ஒரு நீண்ட கோட்டை (அதாவது வாக்குப் பதிவு முடிந்தது என்பதை தெரிவிக்க) இடவேண்டும்.அதன்பிறகு அந்தப் படிவத்தில், கடைசியாக பதிவு செய்த வாக்காளரின் வரிசை எண்ணைத் தெரிவித்து அதற்குக் கீழே அனைத்து வேட்பாளர்களின் முகவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-ஐ, சான்றொப்பமிட்டு அனைத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் வழங்க வேண்டும். அந்தப் படிவங்களை முகவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வாக்குச் சாவடி அதிகாரிகள் அவற்றை அளிக்க வேண்டும் என்று பிரவீண்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி