விடைத்தாள்களை விற்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

விடைத்தாள்களை விற்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுமா?


பள்ளிகளில் தேர்வு முடிந்துள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் எடையில் வரும் பணத்தை விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.

பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 40 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில் மாதாந்திர தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும்.முழு ஆண்டு பேப்பர்களை தவிர, ஆண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் பழைய விடைத்தாள்கள் ஆயிரக்கணக்கான கிலோ சேர்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் 5000 கிலோவில் இருந்து 7000 கிலோ வரை விடைத்தாள்கள் மற்றும் பழைய புத்தகங்கள்,எடைக்கு போடப்படுகின்றன. விடைத்தாள் ஒரு கிலோ 10 ரூபாயில் இருந்து 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் சராசரியாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், நடுநிலைப்பள்ளிகளுக்கு 15 ஆயிரமும், ஆரம்பப் பள்ளிக்கு 10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது.தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் பேப்பர் எடைக்கு போடப்படுகிறது. இதனை பல தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மேற்பார்வையில் வாலிபால், கூடைப்பந்து, வளைபந்து, டென்னிஸ், கிரிக்கெட் பேட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் வாங்குகின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் இதனை பின்பற்றுவதில்லை. முழுப்பணத்தையும் தங்களது சொந்த செலவிற்காக பயன்படுத்துகின்றனர். முறைகேடுகளை தடுப்பதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி