பெண் ஆசிரியர்களுக்கு குடியிருப்புக்கு அருகில் தேர்தல் பணி வழங்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

பெண் ஆசிரியர்களுக்கு குடியிருப்புக்கு அருகில் தேர்தல் பணி வழங்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள்.


தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தது போல் பெண் ஆசிரியர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் தலைவர் தி.கண்ணன், பொதுச்செயலாளர்(பொ) செ.பாலசந்தர், மாநிலப்பொருளாளர் ச.மோசஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறுகின்றத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நேர்மையுடனும் சிறப்பாகவும் நடத்தி வருகின்றது. தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்ற ஆசிரியர்கள் உட்பட்ட பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை கடமையுணர்வோடு நடுநிலை தவறாமல் செயல்படுத்தி வருகிறார்கள்.தமிழகத்தில் கல்வித்துறையில் தற்போது ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களே அதிகம் பணியாற்றுவதால் தேர்தல் பணியில் பெண் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போதுஅவர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படுத்தாத வண்ணம் வருகின்ற ஏப்ரல் - 24ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணியமர்த்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.பெண் ஆசிரியர்களுக்கு இவ்வறிவிப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் தேர்தல் பணியில் அவர்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு பணியமர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாணை பெற்றபெண் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெகு தொலைவில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்த படி பெண் ஆசிரியர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படுத்தாத வண்ணம் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பணியாணை வழங்க மாவட்டத் தேர்தல் அலுவலகர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி