ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் - ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்படும் எனத் தெரிகிறது.
அதற்கு முன்னோட்டமாக தேர்தல் பணிகள் பற்றிய 2-ம் கட்ட பயிற்சிகளை 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள ஒன்றியங்களில் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டகிளையினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.தேர்தல் பணியாற்றும் ஆசிரியைகள் எளிதில் சென்றுவரும் வகையில் 20 கிலோமீட்டருக்குள் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போது 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனை மாற்றி பெண் ஆசிரியைகளுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பயிற்சி வகுப்பும், பணியும் வழங்க ஆட்சியர் ஆவன செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி