ஆசிரியர் கூட்டமைப்பு திடீர் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

ஆசிரியர் கூட்டமைப்பு திடீர் உண்ணாவிரதம்.


தொலைதூர இடங்களில், தேர்தல் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது' வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் எதிரே, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
என, வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.இதில், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.இப்போராட்டத்தில், வேதை வட்டத்திலுள்ள ஆசிரியர்களை மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட அதிக தொலைவுள்ள இடங்களில் தேர்தல் பணியமர்த்தக்கூடாது; மயிலாடுதுறை தேர்தல் பயிற்சி வகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தல் பணி நியமன ஆணையை தேர்தல் அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் எனவும், கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி