அரசுத்துறையை சார்ந்த BSNL நிறுவனம், ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் வழங்கப்படும்.அடுத்த 8 மாதங்களுக்குள் இந்த கல்வி நிறுவனத்திற்கான முறைப்படி அனுமதியை பெறும்பொருட்டு, AICTE மற்றும் UGC ஆகியவற்றை BSNL அணுகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது."AICTE விதிமுறைகளை பூர்த்திசெய்யும் வகையில், தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் வசதியை BSNL பெற்றுள்ளது. மேலும், UGC கூறியுள்ளபடி,தகுதியான மற்றும் போதுமான ஆசிரியர் வசதியையும் பெற்றிருக்கிறோம்" என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.தனது புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான நடைமுறையை அனுமதியைப் பெற்று, அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்துவது BSNL அமைப்பிற்கு கடினமான ஒன்றாக இருக்காது என்றே விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி