நாளை நடைபெறும் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் கலெக்டர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

நாளை நடைபெறும் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் கலெக்டர் தகவல்.


பாராளுமன்ற தொகுதியில் வாக்குச் சாவடி பணி நியமன ஆணை பெற்ற அனைத்து அலுவலர்களும், நாளை நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:வாக்குச்சாவடி அலுவலர்கள்தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களும் கடந்த 12–ந் தேதி ஆஜரான பயிற்சி மையத்தில் மீண்டும் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அவரவர்களுக்கான வாக்குச்சாவடி நியமன ஆணையை பெற்றுக் கொண்டு பயிற்சி மையத்தில் இருந்து நேரிடையாக வாக்குச்சாவடி பணிக்கு செல்ல வேண்டும்.குற்றவியல் நடவடிக்கைஇதில் எந்தவிதமான முறையீடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட நாளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வாக்கு சாவடி பணிக்கு செல்ல தவறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கையும், துறைவாரியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி