அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்.


பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
தமிழகம் முழுவதும் 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாகபெற்றுள்ளனர். அதேபோல், முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 482 பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 887 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம்:

401 - 410 மதிப்பெண் வரை 14,347

411 - 420 மதிப்பெண் வரை 13,847

421 - 430 மதிப்பெண் வரை 12,705

431 - 440 மதிப்பெண் வரை 12,229

441 - 450 மதிப்பெண் வரை 11,267

451 - 460 மதிப்பெண் வரை 9,666

461 - 470 மதிப்பெண் வரை 7,658

471 - 480 மதிப்பெண் வரை 4,865

481 - 490 மதிப்பெண் வரை 2,017

491 - 500 மதிப்பெண் வரை 239

மொத்தம் 88,840

அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மேலும் கூறியது:இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. கற்றலில் குறைபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.அதேபோல், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும் மதிப்பெண்ணை அதிகரிப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.இந்தக் காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளதோடு, அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சியும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி