மறுகூட்டல், சிறப்பு துணை தேர்வுக்கு 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

மறுகூட்டல், சிறப்பு துணை தேர்வுக்கு 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் மற்றும் சிறப்பு துணை தேர்வுக்கு நாளை மறுதினம் (26ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியரை அணுகி, வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள்தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.சிறப்பு துணை தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்விற்கு, 2014 மார்ச் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியரை அணுகி வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி