+2 படிக்காமல் பி.எட்., தேர்வு எழுத அனுமதி:ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

+2 படிக்காமல் பி.எட்., தேர்வு எழுத அனுமதி:ஐகோர்ட் உத்தரவு



பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை சங்கரேஸ்வரி தாக்கல் செய்த மனு:நான் பத்தாம் வகுப்பில் 81 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். பிளஸ் 2 படிக்காமல், 'டிப்ளமோ' (கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்) படித்தேன். பி.எஸ்.சி., தேர்ச்சி பெற்றேன்.விருதுநகர் பி.குமாரலிங்கபுரம் ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரியில் 2013 ல் பி.எட்., படிப்பில் சேர்ந்தேன். பிப்.,27 ல் செய்முறைத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர்,' நீங்கள் பிளஸ் 2 படிக்கவில்லை. அனுமதிக்க முடியாது,' என்றார்.




'பி.எட்., படிக்க எனக்குத் தகுதி இல்லை என இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், பட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்,' என உறுதியளித்ததன் பேரில்,

செய்முறைத் தேர்வுக்கு அனுமதித்தனர்.எழுத்துத் தேர்வு மே 30 ல் துவங்குகிறது. தேர்வுக் கட்டணத்தை, பல்கலைக்கு செலுத்திவிட்டேன். எனக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கவில்லை.'டிப்ளமோ' பிளஸ் 2 விற்கு சமமானது; 'டிப்ளமோ' படித்திருந்தாலும், பி.எட்.,சேர தகுதி உண்டு என 2012 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கவும், தேர்வு முடிந்த பின் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இதுபோல், செல்லம்மாள் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.கருப்பையா முன், விசாரணைகு வந்தது. மனுதாரர்களின் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.நீதிபதி: மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கி, தேர்வு எழுத பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் அனுமதிக்க வேண்டும். மற்றவை, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும். விசாரணை ஜூன் 10 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

1 comment:

  1. Sri sir tet cv tune 10 -13 trb site la podalai athu poiya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி