பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ஆயிரம் சரிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ஆயிரம் சரிவு.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 30 ஆயிரம் சரிந்துள்ளது.
இதற்கு, படிப்பை பாதியில் கைவிடுவோர் காரணமாக இருக்கலாம் என, தெரிகிறது.ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த, 2012ல், 7.56 லட்சம் மாணவர்கள், 2013ல், 7.99 லட்சம் மாணவர்கள், 2014ல், 8.21 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வை எழுதினர். ஒவ்வொரு ஆண்டிலும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, எண்ணிக்கை சரிந்துள்ளது. பள்ளிகளில் படித்து, 2012ல், 10.50 லட்சம்பேரும், 2013ல், 10.51 லட்சம் பேரும் தேர்வு எழுதினர். வெறும், 1,000 பேர் மட்டுமே, கடந்த ஆண்டு, கூடுதலாக எழுதினர். இந்த ஆண்டு, 10.21 லட்சம் மாணவர்கள் தான், தேர்வை எழுதினர். இது, கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறைவு. ஒன்பது மற்றும் 10ம் வகுப்பில், படிப்பை பாதியில்கைவிடும் மாணவர் எண்ணிக்கை, இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி