விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்.


பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் மதிப்பெண்ணை அள்ளிக் குவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது:பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டின் போது மாணவர்களுக்கு தாராளம் எதுவும் காட்டப்படவில்லை. சரியான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட்டது.பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் எடுப்பது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மாணவர்கள் கடுமையாக உழைப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர் என்றார் அவர். இந்த ஆண்டு வினாத்தாள்களும் மிகவும் எளிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி